கொரோனத் தொற்றின் ஒன்பதாவது அலை மிகவும் மோசமாகப் பரவி வரும் நிலையில் பல அமைப்புகள் கட்டாய முகக்கவசச் சட்டத்தினை அமுல்படுத்தும்படி கோரிவரும் நிலையில் இன்னமும் அரசாங்கம் அதற்குத் தயாராக இல்லை.
இன்று Vienne மாவட்டத்தில் Fontaine-le-Comte நகரில் நடந்த தேசிய மறுசீரமைப்பு ஆலோசனை சபையில் கலந்து கொண்டபோது எமானுவல் மக்ரோன் மீண்டும் முகக்கவசம் அணிந்திருந்தார்.
மீண்டும் முகக்கவசப் பழக்கத்திற்கு நாம் திரும்பவேண்டும் எனவும், முகக்கவசப் பொறுப்புணர்வை (???) தன்னிலிருந்தே ஆரம்பித்திருப்பதாகவும் தெரிவித்திருந்த எமானுவல் மக்ரோன், இந்த அமர்வில் பங்குகொண்ட தனது அமைச்சர்களையும் முகக்கவசம் அணிய வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
பொறுப்புணர்வைத் தெரிவித்த எமானுவல் மக்ரோனிற்கு மீண்டும் கட்டாய முகக்கவச சட்டத்தினை நடைமுறைப்படுத்த மட்டும் ஏனோ வழி தெரியவில்லை!