தலைநகர் பரிசின் பல பகுதிகளில் நேற்று திடீரென மின் தடை ஏற்பட்டது. இலட்சக்கணக்கான மக்கள் குளிரில் உறைந்தனர்.
இரவு 10.15 மணி அளவில் இந்த மின் தடை ஏற்பட்டது. பரிசில் 3 ஆம் 4 ஆம் 5 ஆம் வட்டாரங்களில் கிட்டத்தட்ட 125,000 வீடுகள் மின்சாரத் தடையைச் சந்தித்தது.
“1 ஆம் மற்றும் 4 ஆம் வட்டாரங்களில் 75 வீதிகளிலும், 3 ஆம் வட்டாரத்தில் 62 வீதிகளிலும், 5 ஆம் வட்டாரத்தில் 32 வீதிகளிலும் மின் தடை ஏற்பட்டுள்ளது” என RTE en Île-de-France நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
மின்சாரத்தடை இரவு 11 மணிவரை நீடித்ததாகவும், வெப்பமூட்டிக்காக மின்சாரத்தை பயன்படுத்தும் பலர் குளிரில் உறைந்திருந்ததாகவும்
இணையத்தில் கருத்து தெரிவித்துள்ளனர்.
பிரான்சில் மின்சார உற்பத்தி குறைவடைந்துள்ளதை அடுத்து மின் தடை ஏற்படும் அபாயம் எழுந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், நேற்றைய இச்சம்பவம் மக்களிடையே மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.