Le Blanc Mesnil காவல் நிலையத்தில் இளம்பெண் கொடுத்த முறைப்பாடு ஒன்று ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. தனது காதலன் தன்னைக் கடத்திச் சென்று, பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் அதை ஒளிப்பதிவு செய்துகொண்டதாகவும் குறித்த முறைபாட்டில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நவம்பர் 23 ம் திகதி இரவு இச்சம்பவம் நடந்துள்ளது. இத்தாலி நாட்டைச் சேர்ந்தவரான அப்பெண், Le Blanc Mesnil காவல்நிலையத்துக்குச் சென்று நடந்த சம்பவங்களை விபரித்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணைகள் மற்றும் தேடுதல்களை அடுத்து, குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.