ரஷ்யா தன் குற்றச்செயல்களுக்கு பதிலளித்தே ஆகவேண்டும் என்று கூறியுள்ளார் பிரான்ஸ் ஜனாதிபதியான இமானுவல் மேக்ரான்.

உக்ரைன் நகரமான Buchaவில் கொல்லப்பட்ட அப்பாவி பொதுமக்களுடைய புகைப்படங்கள் நேற்று வெளியான நிலையில், ரஷ்ய தரப்பின் நடவடிக்கைகளை கண்டித்த மேக்ரான், ரஷ்ய அதிகாரிகள் தங்கள் குற்றச்செயல்களுக்கு பதிலளித்தே ஆகவேண்டும் என்று கூறினார்.
உக்ரைன் தெருக்களில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கோழைத்தனமாக கொன்று குவிக்கப்பட்டுள்ளார்கள் என்று ட்விட்டரில் வெளியிட்ட செய்தி ஒன்றில் தெரிவித்துள்ளார் அவர்.

சனிக்கிழமையன்று Bucha நகரின் தெருக்களில் வரிசையாக கிடந்த பொதுமக்களின் உடல்களைக் காட்டும் புகைப்படங்கள் வெளியாகி கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் ரஷ்யாவுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.