பிரான்சின் SNCF வாடிக்கையாளர் சேவை நிறுவனம் சரியான நேரத்தில் தம்முடைய சேவையை வழங்க முடியாமையினால் பயனர்கள் பெரிதளவில் பாதிக்கப்படுகின்றனர், ஒரு வேளை பயனர் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்த வேலைகளை செய்ய வேண்டியதன் அவசியத்தை புரிந்து கொண்டார்களானால் அவர்களுக்கான பொறுப்பு மிக அதிகம் என தெரிவிக்கப்படுகிறது.

SNCF நிறுவனம் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இதே போல் அதன் பணி நிர்வாகத்தை மதிப்பாய்வு செய்ய அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.Ile-de-France இல் பல ஆண்டுகளாக இதே பிரச்சனை தொடர்கிறது, SNCF அதன் நெட்வொர்க்கில் வேலை செய்கிறது, ஆனால் பயனர்கள் “நேர்மறையான விளைவுகளை” பார்க்காமலேயே அவை நீடிக்கின்றன, என்று போக்குவரத்து பயனர்களின் தேசிய கூட்டமைப்பின் (FNAUT) பாரிஸ் தலைவர் மார்க் பெலிசியர் வருத்தம் தெரிவித்தார்

அவர் மேலும் தெரிவிக்கையில் வேலை அவசியம் தான் அதை நான் ஒப்புக்கொள்கிறேன் ஆனால் சில நேரங்களில் சில விடயங்கள் பழக்கமாகி விடுமோ என்று நாங்கள் அஞ்சுகின்றோம் என்கிறார்.இது குறித்து Le Parisien இல், RER D SaDur சங்கத்தின் தலைவர் கருத்து தெரிவிக்கையில், மற்றுமொரு பிரச்சனை, போக்குவரத்து அதிகாரசபையின் தகவல் இல்லாததும் இந்த பிரச்சனைக்கான காரணம் என்கிறார்.

மேலும் சில நேரங்களில் பயணிகள் ஒரு PDF இன் மூன்றாவது பக்கத்தைத் திறந்து, எந்தப் பகுதி மூடப்பட்டுள்ளது என்பதைப் புரிந்துகொள்ள சிறிய நட்சத்திரக் குறியைப் படிக்க வேண்டியுள்ளது. SNCF மக்களையும் நிறுவனத்தின் கட்டமைப்புக்குள் இருக்கும் நம்பர்களாக நினைக்கிறார்கள் எனக் குறிப்பிடுகிறார்.எல்லாவற்றிற்கும் மேலாக பல்வேறு பயனர் சங்கங்கள் SNCF இன் RATP போன்ற சேவைகள் ஏன் மேற்கொள்ளப்படவில்லை என்பதை சரியான முறையில் புரிந்து கொள்ளவில்லை.
அவர்கள் ட்ரான்சிலியன் நெட்வொர்க் மற்றும் RER A தொடர்ச்சியாக மூன்று வாரங்கள் மூடப்பட்டிருந்தாலும் மிகவும் நம்பகரமான நெட்வெர்க்காக மீண்டும் செயற்பட முடிந்ததை உதாரணமாக எடுத்துக்கொண்டுள்ளார்கள் என்று அசோசியேஷன் ப்ளஸ் டீ ட்ரைன்ஸ்(association Plus detrains) இன் தலைவர் பாரிசியன் அர்னாட் பெர்ட்ராண்டிடம் குறிப்பிடுகிறார். அத்தோடு பயனர்கள் முன்கூட்டியே எச்சரிக்கப்பட்டதையும் நினைவுபடுத்தினார்.