ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து பெற்றோல் மற்றும் டீசல் லிட்டரிற்கு 15 சதங்கள் குறைக்கப்படும் என பிரதமர் ஜோன் கஸ்தெக்ஸ் அறிவித்துள்மை போதாது என்றும், இது பிழையான நடவடிக்கை என்றும், டுய குசயnஉந iளெழரஅளைந கட்சியின் தலைவரும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜோன்-லுக் மெலோன்சோனின் தேர்தற் பிரச்சாரக் குழுவின் இயக்குனர் மனுவல் பொம்பார் விமர்சித்துள்ளார்.

உக்ரைன் பிணக்கு ஆரம்பித்ததில் இருந்து பெற்றோல் மற்றும் டீசல் லிட்டரிற்கு 60 முதல் 70 சதங்களினால் அதிகரித்துள்ளது. ஒன்றுமில்லாத நிலையில் 15 சதங்கள் குறைக்கப்படும் எனப் பிரதமர் அறிவித்துள்ளமை பரவாயில்லை தான். ஆனால் இது போதுமானதல்ல. இது பிலையான அணுகுமுறை. நிலைமை கட்டுங்கடங்காமல் மோசமாகச் செல்கின்றது»

«பெற்றோல் மற்றும் டீசல் எரிபொருட்களை லிட்டரிற்கு 1€40 என கட்டணத்தை நிர்ணயம் செய்து அதை அந்த நிலையிலேயே உறுதிப்படுத்தி உறைநிலைக்குக் கொண்டுவரவேண்டும்»

என ஜோன்-லுக் மெலோன்சோனின் தேர்தற் பிரச்சாரக் குழுவின் இயக்குனர் மனுவல் பொம்பார் ஊடகச் செவ்வியில் தெரிவித்துள்ளார்.