குளிர்காலம் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், வாடகை செலுத்தவில்லை எனும் காரணம் காண்பித்து வாடகை வீட்டில் குடியிருப்பவர்களை வீட்டின் உரிமையாளர் வெளியேற்ற முடியாது எனும் "trêve hivernale" சட்டமும் நிறைவுக்கு வந்துள்ளது. 

இன்று மார்ச் 31 ஆம் திகதி நள்ளிரவுடன் இந்த சட்டம் முடிவுக்கு வருகிறது.  வாடகை வீட்டில் வசிப்பவர்களை, இந்த குளிர்காலத்தின் போது வாடகை செலுத்தவில்லை எனும் காரணத்துக்காக வீட்டை விட்டு வெளியேற்ற முடியாது.  சென்ற ஆண்டு நவம்பர் 1 ஆம் திகதி ஆரம்பமான இந்த சட்டம் இன்று நள்ளிரவுடன் முடிவுக்கு வருகிறது.