13 வயதுடைய சிறுமி ஒருவரை பாலியல் வன்புணர்வு மேற்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இரு வாரங்களுக்கு முன்னர் பரிசில் இடம்பெற்றுள்ள போதும், இது தொடர்பான தகவல்களை நேற்றைய தினமே காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். கடந்த மார்ச் 17 ஆம் திகதி அன்று பரிசில் 10 ஆம் வட்டாரத்தில் வைத்து 13 வயதுடைய சிறுமி ஒருவரை 50 வயதுடைய ஒருவர் பாலியல் பலாத்காரம் மேற்கொண்டுள்ளார்.
காவல்துறையினர் மேற்கொண்டு வந்த விசாரணைகளில் குறித்த நபர் மார்ச் 24 ஆம் திகதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான நபர் இதுபோன்ற பல்வேறு பாலியல் குற்றங்களில் ஈடுபட்டமைக்காக கைது செய்யப்பட்டு, காவல்துறையினரால் நன்கு அறியப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.