பிரெஞ்சு நபர் ஒருவர் தனக்கு கிடைத்த 200 மில்லியன் யூரோக்களின் பெரும்பகுதியை நன்கொடையாக வழங்கியுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பரில் பிரெஞ்சு நபர் ஒருவர் EuroMillions அதிஷ்ட்டத்தில் 200 மில்லியன் யூரோக்களை வென்றிருந்தார். பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், அவர் வென்ற அந்த பணத்தில் கிட்டத்தட்ட அனைத்தையுமே அவர் தொண்டு நிறுவனம் ஒன்றுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார்.
அவர் இந்த பெருந்தொகை பணத்தை வென்றதும், அவரை பல நிறுவனங்கள் அனுகி பணத்தை தங்கள் நிறுவனங்களில் முதலிடும் படி அவரை கோரியுள்ளனர். ஆனால் அவர் தமக்கு அதில் எல்லாம் ஈடுபாடு இல்லை என தெரிவித்து, ஆடம்பர வாழ்க்கையை தவிர்த்து, அமைதியான வாழ்க்கையை வாழ விரும்புவதாக தெரிவித்து பணத்தை நன்கொடையளித்ததாக தெரிவித்தார்.
அதேவேளை, குறித்த நபர் தனது சொந்த தேவைக்காக தனது நீண்ட நாள் கனவாக இருந்த கனரக வாகனம் ஒன்றை வாங்கியுள்ளதாகவும், தாம் மகிழ்ச்சியாக இருப்பதாகவும் தெரிவித்தார்.