ஜொந்தாமினர் மீது தாக்குதல் நடத்த முற்பட்ட ஒருவர், அதிகாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
குடும்ப வன்முறை ஒன்றின் தொடர்ச்சியாக இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. Pierre-Châtel (Isère) நகரில் வசிக்கும் வயதான தம்பதிகள் இருவர் ஜொந்தாமினர்களை அழைத்துள்ளனர். அத்தம்பதிகளின் மகன், பெற்றோர் இருவரையும் கத்தி ஒன்றின் மூலம் அச்சுறுத்துவதாக தெரிவிக்கப்பட்டு அவர்கள் அழைக்கப்பட்டனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற அதிகாரிகள், தாக்குதல் நடத்த முற்பட்ட நபரை கைது செய்ய முயன்றனர். ஆனால் குறித்த நபர் அதிகாரிகளை தாக்க முற்பட்டுள்ளார்.
அதையடுத்து ஜொந்தாமினர் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.