பிரான்ஸில் உள்ள PYRÉNÉES-ORIENTALES என்னும் இடத்தில் ஊனமுற்ற பெண் ஒருவர் நடுத்தெருவில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்! இந்த சம்பவத்தில் தொடர்பு உடைய இரண்டு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர்!
Enveitg (Pyrénées-Orientales) இல் ஊனமுற்ற தொழிலாளி ஒருவருக்கு ஏற்பட்ட வன்முறைத் தாக்குதலைத் தொடர்ந்து நீதித்துறை நேற்று விசாரணை ஒன்றைத் திறந்துள்ளது. இரண்டு சந்தேக நபர்கள் குற்றஞ்சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் 20 வயது பெண் ஊனமுற்றவர் மற்றும் நகரத்தின் ESAT இல் பணிபுரிகிறார் என்று தெரியவந்துள்ளது. ஞாயிறு இரவு, அவர் வேலை செய்யும் இடத்திலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு தெருவில் அவர் தாக்கப்பட்டுளார்.
சந்தேக நபர்களான 20 வயது இளைஞரும் 28 வயதுடைய நபரும் அவரது தனிப்பட்ட உடமைகளைத் திருட முயற்சி செய்துள்ளனர். இரண்டு சந்தேக நபர்களும் வீடற்றவர்கள் என தெரிய வந்துள்ளது.
இருவரில் ஒருவர் “வன்முறையுடன் திருட்டை மறைத்ததற்காகவும், ஆபத்தில் உள்ள ஒருவருக்கு உதவத் தவறியதற்காகவும்” குற்றஞ்சாட்டப்பட்டார், மேலும் அவர் மீது “கற்பழிப்பு மற்றும் திருட்டு வன்முறை” என்று குற்றம் சாட்டப்பட்டது.