பாரிஸில் உள்ள ரஷ்யத் தூதரகத்தின்
ருவீற்றர் பக்கத்தில் வெளியிடப்பட்ட
கேலிச் சித்திரம் ஒன்று பிரான்ஸைக்
கடுப்புக்குள்ளாக்கியிருக்கிறது.வெளிவிவகார அமைச்சு உடனடியாகவே ரஷ்யத் தூதரை அழைத்துத் தனது கடும் கண்ட
னத்தை அவரிடம் தெரிவித்துள்ளது.
பிரெசெல்ஸ் நகரில் அதிபர் மக்ரோனி
டம் ரஷ்யத் தூதரகத்தின் கேலிச் சித்தி
ரங்கள் குறித்து செய்தியாளர்கள் கேள்
வியெழுப்பினர்.அதற்கு அவர் தூதரக ராஜதந்திரிகளின் "தவறு" "ஏற்றுக்
கொள்ள முடியாத கேலிச் சித்திரங்கள்" என்று கண்டனம் வெளியிட்டுள்ளார்.
"நாங்கள் ரஷ்யாவுடன் மரியாதைக்குரிய
முறையில் பேச்சுக்களில் ஈடுபட்டு வருகி
ன்றோம். போரில் சகல தரப்புகளையும்
மதித்து சமரச முயற்சிகளை முன்னெடு
த்து வருகிறோம்.எனவே இது ஒரு தவறு என நான் நினைக்கிறேன். அது திருத்தப்
படும் என நம்புகிறேன்" என்று மக்ரோன்
தெரிவித்துள்ளார்.
இரண்டு கேலிச் சித்திரங்களில் ஒன்று
நோயுற்ற ஐரோப்பாவுக்கு அமெரிக்கா
வும் ஐரோப்பிய ஒன்றியமும் பல தடுப்
பூசிகளைக் குத்திச் சிகிகிச்சை அளிப்ப
தனை உருவகப்படுத்துகிறது. "நியோ
நாசிஸம்" (neo-Nazism) ரஷ்ய எதிர்ப்பு
ணர்வு (“Russophobia”) மற்றும் கோவிட்-19 (“Covid-19”), நேட்டோ (NATO) போன்ற பெய
ர்களில் தடுப்பூசிகள் ஏற்றப்படுகின்றன.
(படம் :ரஷ்யத் தூதரகத்தின் ருவீற்றர் ஸ்கிரீன் ஷொட்)