துலூஸ்: இரண்டு ஊனமுற்ற நபர்களிடமிருந்து 60,000 யூரோக்களுக்கு மேல் கொடுப்பனவுகளை திருடியதாக சந்தேகிக்கப்படும் நபர்!

இரண்டு ஊனமுற்ற நபர்களிடமிருந்து கொடுப்பனவுகளில் 60,000 யூரோக்களை திருடியதாக சந்தேகிக்கப்படும் ஒரு நபருக்கு எதிராக Toulouse-Mirail நிறுவனத்தின் காவல் துறையினர் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

2020ல், 80% ஊனமுற்ற நதியா, டேட்டிங் தளத்தில் பியரை சந்தித்தபோது தான் இந்த கதை தொடங்கியுள்ளது. இருவருக்கும் இடையில் மலர்ந்த காதல் காரணமாகவும் தன் துணை மீதுள்ள அதீத நம்பிக்கை காரணமகவும் தன் வங்கி கணக்கின் தகவல்களை அவரின் கணக்குடன் இணைத்து மீண்டும் துண்டிக்க மறந்துள்ளார்.

சில நாட்களுக்குப் பிறகு நதியாவின் வங்கி கணக்கில் பணம் இல்லை என்பதை உணர்ந்து தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை அறிந்து வங்கிக்கு சென்று தன் வங்கி கணக்கை ஆய்வு செய்துள்ளார். கிட்டத்தட்ட அவரது வங்கி கணக்கில் இருந்து 30,000 யூரோக்கள் திருடப்பட்டுள்ளது.

அவரின் துணை அவரின் இயலாமையை பயன்படுத்தி அவருக்கு வந்த பணத்தை தான் வாழ்வதற்கு பயன்படுத்தியுள்ளார் நதியா மிகவும் மன உளைச்சலுக்கு உள்ளானார். எனவே அவரது வழக்கறிஞர்களின் உதவியுடன், பாதிக்கப்பட்ட பெண் பியூசெல் ஜெண்டர்மேரியிடம் புகார் அளித்தார்.