இன்றைய வாகனப்பேரணிப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம். அனைவரும் வாரீர்!!

அன்பான தமிழீழ மக்களே! விடுதலை உணர்வாளர்களே!

அனைத்து தமிழ்ச்சங்க  தலைவர் மற்றும் பரப்புரை ஏனைய உறுப்பினர்களே! இளையோர்களே புரட்சிகர வணக்கம்!🙏

தாயகத்தில் நடைபெற்ற பொத்துவில் தொடங்கி பொலிகண்டிவரையிலான எழுச்சிப்பேரணிக்கு புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தமிழீழ மக்களும் தாம் வாழும் நாட்டின் தற்போதைய நிலவரங்களுக்கேற்ப தமது சனநாயக எழுச்சிப் போராட்டங்களை செய்து வருகின்றனர். 
இன்று இளையவர்கள் இப்பணிகளை முன்னெடுத்து தமிழீழ மக்களின் அபிலாசைகளை சர்வதேசத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர். இன்றைய அரசியல் சூழலில் இளையவர்கள் இவர்களின் கரங்களைப் பலப்படுத்த வேண்டியது புலம்பெயர்ந்து வாழும் ஒவ்வொரு உணர்வுள்ள தமிழர்களின் கடமையாகும்.
பிரான்சில் வரும் 13.02.2021 சனிக்கிழமை 13.45 மணிக்கு பிரான்சு தமிழ் இளையோர் 2ஆவது தடவையாக முன்னெடுக்கும் வாகனப்பேரணிப் போராட்டத்திற்கு வலுச்சேர்ப்போம். இப்பேரிடர் காலத்தில் பிரான்சு வாழ் தமிழீழ மக்களின் அபிலாசைகளையும் தமிழீழ தேசம்மீதான உணர்வையும்,  பிரெஞ்சு தேசத்திற்கும், அரசிற்கும், சர்வதேசத்திற்கும் எடுத்துக் காட்டுவோம்.
அன்புடையீர்! இதனை கவனம் எடுத்து செய்யுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
• உங்கள் பிரதேசத்திலிருந்து குறைந்தது 30 வானகங்களுக்கு குறையாது கலந்து பங்களிக்கச் செய்யுங்கள். ( அவற்றினை உறுதிப்படுத்துங்கள்.) 
• கோவிட் 19 கவனத்திற்கொண்டு ஒவ்வொரு தமிழர்களும் சுயபாதுகாப்பை பேணிகொள்ளுங்கள்.( மாஸ்க்,
• தமிழீழத் கொடியுடன், நாம் வாழும் பிரெஞ்சு நாட்டுக் கொடியுடன் உங்கள் குடும்பத்துடன் இப்பேரணியில் இணைந்து கொள்ளுங்கள்.
• வாகனப்பேரணியின் ஒழுங்குகள் இளையவர்கள்  நேர்த்தியாக முன்னெடுப்பதால் அனைவரும் அதற்கு முழுமையான ஒத்துழைப்பை நல்கும் வண்ணம் கேட்டுக் கொள்கின்றோம். பேரணியின் ஆரம்பத்திலேயே அனைவரின் ஒத்துழைப்பை தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இத்தகவலை அனைவருக்கும் பகிர்ந்து கொள்ளவும்.   - பரப்புரை –
மேலதிகத் தொடர்புகளுக்கு :- 01- 48 22 01 75 – 07-58713839 07-51569744