ஐந்தாம் நூற்றாண்டு போர்க்கால கருவியை வைத்து சண்டையிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் கடந்த திங்கட்கிழமை மே 9 ஆம் திகதி இடம்பெற்றுள்ள போதும், நேற்றைய தினமே இது தொடர்பாக காவல்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். Montjoie, Saint-Denis நகரில் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டதை அடுத்து, சம்பவ இடத்துக்கு காவல்துறையினர் விரைந்து சென்றனர்.
அங்கு இரு சகோதர்கள் சண்டையிட்டுக்கொண்டிருந்துள்ளனர். அதில் ஒருவர் 5 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த வாள் போன்ற அயுதம் ஒன்றைக் கொண்டு மற்றையவரை தாக்கிக்கொண்டிருந்துள்ளார். இந்த ஆயுதத்தை கண்டதும் காவல்துறையினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
பின்னர் தாக்குதல் நடத்திய நபரை கைது செய்ததோடு, ஆயுதத்தையும் கைப்பற்றினர். குறித்த ஆயுதம் அவரது கைக்கு கிடைத்தது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.