பிரான்ஸ்: Vaires-sur-Marne இல் இரவு உணவின் போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் தனது சகோதரனை கத்தியால் கொன்ற அண்ணன். சனிக்கிழமையன்று 21 வயது இளைஞன் தனது 20 வயது சகோதரனை கத்தியால் குத்தி கொலை செய்தான். வேண்டுமென்றே கொலை செய்ததற்காக அவர் கைது செய்யப்பட்டார்.

பாதிக்கப்பட்டவரின் உடலை பிரேத பரிசோதனை செய்ய மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. விசாரணையின் முதற்கட்டதின் முடிவின் அடிப்படையில் பெரிய அண்ணன் தன்னை தற்காத்துக் கொள்ள கத்தியை எடுத்ததாக தெரிய வந்துள்ளது.

அவரது சிறிய சகோதரர் அவரை குத்தியதால், அவரை கத்தியால் குத்தியுள்ளார். இளையவர் சரிந்து பின்னர் சுயநினைவை இழந்தார். மூத்தவர் அவருக்கு முதல் உதவி செய்துள்ளார். ஆனால், 20 வயதான தம்பி அந்த இடத்திலேயே இறந்தார்.

மூத்த சகோதரர் வேண்டுமென்றே கொலை செய்ததற்காக நொய்சியல்-பொன்டோல்ட் காவல் நிலையத்தில் காவலில் வைக்கப்பட்டார். அவர் திங்கட்கிழமை Meaux நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார். Meaux இன் அரசு வழக்கறிஞர் Laureline Peyrefitte கருத்துப்படி, பாதிக்கப்பட்டவரின் உடலில் பிரேத பரிசோதனை செய்யப்படும்