Drancy நகரில் இடம்பெற்ற தீ விபத்து ஒன்றில் இளைஞன் ஒருவன் சாவடைந்துள்ளான். 
 
இன்று சனிக்கிழமை அதிகாலை 3 மணி அளவில் இச்சம்பவம்  Drancy (Seine-Saint-Denis) நகரில் இடம்பெற்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு படையினர், நீண்ட போராட்டத்தின் பின்னர் தீயை அணைத்தனர். தீக்குள் சிக்கி 17 வயதுடைய இளைஞன் ஒருவர் சாவடைந்துள்ளான். 
 
rue La Doucette  வீதியில் உள்ள குடியிருப்பு கட்டிடம் ஒன்றிலேயே தீ விபத்து இடம்பெற்றுள்ளது. இவ்விபத்தில் மேலும் மூவர் இலேசான காயங்களுக்கு உள்ளாகினர். 20 தீயணைப்பு படையினர் போராடி தீயை அணைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.