ஏற்கனவே கோவிட் -19 இலிருந்து மீண்ட மக்கள் ஒரே தடுப்பூசி அளவைப் பெறுமாறு பிரான்ஸ் வெள்ளிக்கிழமை பரிந்துரைத்துள்ளது, இதன் மூலம் பிரான்ஸ் சிறந்த ஆலோசனைகளை வழங்கிய முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தில் பயன்படுத்த அனுமதிக்கப்பட்ட மூன்று கோவிட் -19 தடுப்பூசிகளும் இரண்டு டோஸ் வடிவில் நிர்வகிக்கப்பட்டு, பல வாரங்கள் இடைவெளியில் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு தனிநபர்களும் இரண்டு டோஸ்களைப் பெற்ற பிறகு நோய்க்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தி கணிசமான அளவில் அதிகரித்திருப்பதாக மருத்துவ பரிசோதனைகள் வெளிப்படுத்துகின்றன.

எவ்வாறாயினும், ஏற்கனவே கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்ட மக்கள், தடுப்பூசி மூலம் உருவாக்கப்படும் நோய் எதிர்ப்பு சக்தி அளவைப் போலவே நோயெதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறார்கள் என்றும், நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒரு டோஸ் போதுமானதாக இருக்கும் என்றும் பிரான்சின் பொது சுகாதார ஆணையம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.

தடுப்பூசியின் ஒரு டோஸ், உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு கோவிட் -19 உடன் எவ்வாறு போராடுவது என்ற நினைவூட்டலை வழங்குவதற்குப் போதுமானதென விளக்குகிறார்கள்.
அத்தோடு ஒவ்வொரு தனிநபரும் கோவிட் -19 தொற்றிலிருந்து மீண்ட நபர்களாயின் ஒரு ஜப் பெறுவதற்கு முன்பு, தொற்றுநோய்க்கு மூன்று முதல் ஆறு மாதங்கள், இடையில் இடைவெளி உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறார்கள்

கோவிட் -19 நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரே தடுப்பூசி போதுமானது என்ற கருத்தை இதுவரை எந்த நாடுகளும் முன்வைக்கவோ, ஏற்றுக்கொள்ளவோ இல்லை என்பதையும் தெரிவித்தனர்.