பரிசில் உள்ள உணவகங்கள் மற்றும் அருந்தகங்களுக்கு வழங்கப்படும் கோடைகால சலுகைகள் இம்முறை மட்டுப்படுத்தப்பட்டு வழங்கப்பட்டுள்ளது.
ஆண்டுதோறும் கோடை காலங்களின் போது உணவகத்தினர் தங்கள் உணவங்க முற்றத்திலும், மாடிகளிலும் தற்காலிக இருக்கைகளை அமைத்து (terraces) வாடிக்கையாளர்களை கவர்வது வழக்கம். வருடம் தோறும் பரிசில் 12,000 வரையான உணவங்கள், அருந்தகங்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டு வந்த நிலையில், இம்முறை 4,000 உணவகங்கள் மற்றும் அருந்தகங்களுக்கு மட்டுமே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சென்ற ஆண்டும் 12,000 அனுமதிகள் வழங்கப்பட்டிருந்தது.
இந்த அனுமதி குறைந்த பட்சமாக வழங்கப்பட்டுள்ளதால் உணவக உரிமையாளர்கள் நகரசபையிடம் புகார் அளித்துள்ளனர்.
வரும் வெள்ளிக்கிழமை ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் உணவக/ அருந்தக உரிமையாளர்கள் இந்த terraces இனை உருவாக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.